தருமபுரியில் வேளாண் கல்லூரி மாணவிகள் 3 பேரை எரித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக பிரமுகர்களை விடுதலை செய்யததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் காரமடையில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு, அச்சங்கத்தின் காரமடை பகுதி தலைவர் தினேஷ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் தினேஷ் சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், பாலியல் குற்றங்களை தடுக்கக் கோரியும், ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள்பங்கேற்றனர்.