உடற்கல்வி இயக்குநர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை நேரு விளையாட்டு அரங்கில் 2 நாள்கள் நடைபெற்ற உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நிறைவடைந்தது.

கோவை நேரு விளையாட்டு அரங்கில் 2 நாள்கள் நடைபெற்ற உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நிறைவடைந்தது.
அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும், விளையாட்டுப் போட்டிகள் குறித்து பயிற்சி அளிக்கவும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கியது.
இதில், கோவை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 50 பேர் பங்கேற்றனர். 
இந்தப் பயிற்சியில், வாள் சண்டை, சிலம்பம், தடகளம், ஜூடோ, ஜிம்னாஸ்டிக், தேக்வாண்டோ, கேரம், சைக்கிளிங் உள்ளிட்ட விளையாட்டுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 
பயிற்சி முடித்த இயக்குநர்கள், ஆசிரியர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) ஜெயச்சந்திரன், பயிற்சி நிறைவுக்கான சான்றிதழ்களை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com