கோவையில் இருசக்கர வாகனங்களைத் திருடியதாக இளைஞரை செல்வபுரம் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடுபோவதாக காவல் ஆணையருக்கு புகார்கள் வரத்தொடங்கின.
இதைத் தொடர்ந்து காவல் ஆணையர் கு.பெரியய்யா உத்தரவின்பேரில், உதவி ஆணையர் சோமசுந்தரம் மேற்பார்வையில் செல்வபுரம் காவல் ஆய்வாளர் முத்துமணி தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது.
இந்தத் தனிப்படையினர் நடத்திய விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி, ஸ்ரீநகரைச் சேர்ந்த எஸ்.குருபிரசாத் (22) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து கோவையின் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.