பாதுகாப்புத் துறை கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி: கோவையில் 26இல் நடக்கிறது

பாதுகாப்புத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக கோவையில் வரும் 26ஆம் தேதி (புதன்கிழமை) விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்திய பாதுகாப்புத் துறையை மேம்படுத்தும் நோக்கில் தொழில்ந

பாதுகாப்புத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக கோவையில் வரும் 26ஆம் தேதி (புதன்கிழமை) விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்திய பாதுகாப்புத் துறையை மேம்படுத்தும் நோக்கில் தொழில்நுட்பம் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து, அதை பயன்பாட்டுக்குத் தேவையான வகையில் வடிவமைப்பதற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது.
பாதுகாப்புத் துறைக்குத் தேவையான கண்டுபிடிப்புகள் உருவாக்குவதை ஊக்குவிப்பதற்காக புதிய தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு போட்டியை அறிவித்துள்ளது.
இந்தப் போட்டி குறித்து தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களுக்கு விளக்குவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சரவணம்பட்டியில் உள்ள போர்ஜ் தனியார் நிறுவனத்தில் நடைபெறுகிறது.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு இணையதளத்தைக் காணலாம் என்று போர்ஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com