வால்பாறையில் அரசு மருத்துவமனை இருந்தும் பெரும்பாலான நோயாளிகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
வால்பாறையில் அரசு மருத்துமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதர நிலையம் உள்ளன. படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துமனைகளில் அறுவை சிகிச்சை அறை மற்றும் அணைத்து உபகரணங்களும் உள்ளன. ஆனால் போதுமான மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் உயர் சிகிச்சை அளிப்பதை தவிர்த்து அவசர சிகிச்சைக்கு வரும் அனைத்து நோயாளிகளையும் பொள்ளாச்சி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வருகின்றனர். இதில் சமீபகாலமாக பிரசவத்துக்கு வரும் கார்ப்பிணி பெண்களையும் பல காரணங்களைக் கூறி பொள்ளாச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வருவதாகவும், இதனால் பெரும் சிரமம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.