மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான மருத்துவ முகாம் வால்பாறையில் செவ்வாய்கிழமை (செப்டம்பர் 25) நடைபெறுகிறது.
அணைவருக்கும் கல்வி இயக்கம் நகர்புற வள மையம் சார்பில் நடத்தப்பட உள்ள இந்த முகாம் வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ள இந்த சிறப்பு மருத்துவ முகாமுக்கு வரும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் தங்களின் பிறப்புச் சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை மற்றும் 5 புகைப்படங்களைக் கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.