இரு பெண்களிடம் 7 பவுன் நகைப் பறிப்பு

கோவை, காந்திபுரம் பகுதியில் இரு பெண்களிடம்  இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் 7  பவுன் நகையை சனிக்கிழமை பறித்துச் சென்றனர்.

கோவை, காந்திபுரம் பகுதியில் இரு பெண்களிடம்  இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் 7  பவுன் நகையை சனிக்கிழமை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: 
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த மலையடி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யதாஸ். இவரது மனைவி இந்திரா நோபல் (58).  இவர்கள் கடந்த சில நாள்களுக்கு முன்னர் உதகைக்கு சுற்றுலாச் சென்றுள்ளனர். 
இதன் பிறகு சொந்த ஊர் திரும்புவதற்காக கோவைக்கு சனிக்கிழமை வந்துள்ளனர்.  அப்போது அவரது கணவர் டிக்கெட் எடுப்பதற்காகச் சென்றுவிட  இந்திரா நோபல் மட்டும் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் 
தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது 
இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் இந்திரா நோபல் அணிந்திருந்த 5 பவுன் நகையைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். 
மற்றொரு சம்பவம்:  சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்தவர் அன்பரசன். இவரது மனைவி லீலாவதி (45), இவர் தனது உறவினரைப் பார்ப்பதற்காக கோவைக்கு சனிக்கிழமை  வந்துள்ளார். 
பின்னர் உறவினர் பணம் எடுக்க ஏடிஎம் மையத்துக்கு சென்றதால் ராம் நகரில் சாலையில் தனியாக நின்று கொண்டிருந்தார்.  அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் லீலாவதியிடம் இருந்து 2 பவுன் நகையைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். இந்த இரு சம்பவங்கள் குறித்து காட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த இரு சம்பவங்களும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நடந்துள்ளதால் இதில் ஈடுபட்டது ஒரே கும்பலாக இருக்கலாம் என போலீஸார் தெரிவிக்கின்றனர். மேலும்,  காந்திபுரம் பகுதியில் நடந்து சென்ற 3 இளைஞர்களிடம் இருந்து செல்லிடப்பேசிகளையும் இந்தக் கும்பல் பறித்துச் சென்றது தெரியவந்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com