வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த யானைகள், அங்கிருந்த கோயிலை இடித்து சேதப்படுத்தின.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்து காணப்படுகிறது. சின்கோனா எஸ்டேட்டை ஒட்டியுள்ள வனங்களில் இருந்து வெளியேறும் யானைகள் எஸ்டேட் பகுதிகளுக்குள் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், பெரியகல்லாறு எஸ்டேட் பகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த 5 யானைகள், அங்குள்ள மாரியம்மன் கோயிலை இடித்து சேதப்படுத்தின. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்தை வனத் துறையினர் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டனர்.