சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊழல் முறைகேட்டில் ஈடுபடும் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சத்துணவு ஊழியர்

ஊழல் முறைகேட்டில் ஈடுபடும் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இன்னாசிமுத்து தலைமையில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் பேயத்தேவன் உரையாற்றினார்.
 கோவை மாவட்ட சத்துணவுத் துறையில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பதவியில் உள்ளவர், ஊழியர்கள் நியமனம் உள்ளிட்ட அனைத்து வகைப் பணிகளிலும் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சத்துணவு ஊழியர் சங்கத்தினர் போராடிப் பெற்ற சிறு, சிறு சலுகைகளைப் பெறுவதற்குக்கூட அவர் பணம் பெற்றுக் கொண்டு செயல்படுகிறார்.  இதனால் ஆத்திரமடைந்த அவர், தன்னால் ஆதாயம் அடைந்த அமைப்புகளுடன் இணைந்து சத்துணவு ஊழியர் சங்கத்தின் மீது பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார் என இந்த ர்ஆப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர்  பழனிசாமி, செயலாளர் குமார் உள்ளிட்ட மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் 
கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com