அன்னூர் கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
அன்னூர் கிளை நூலகத்தில் உலக புத்தக தினத்தையொட்டி கிளை நூலகர் சிவக்குமார், நூலகத்தில் உள்ள புத்தகங்கள் மற்றும் எத்தனை தலைப்புகளில் புத்தகங்கள் உள்ளன என்பது குறித்து வாசகர்களிடம் விளக்கினார். மேலும் வாசகர்கள் வாசிப்பை நேசிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், வாசகர் வட்டத்தினர் மற்றும் வாசகர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.