புல்வாமாவில் பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என்று மாதா அமிர்தானந்தமயி மடம் அறிவித்துள்ளது.
இது குறித்து மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி:
நாட்டைப் பாதுகாக்கின்ற வகையில் தங்கள் கடமையின்போது உயிரிழந்த இந்த வீரம் மிக்க ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு அளிப்பது நமது தர்மமும், பொறுப்புமாக இருக்கிறது. இவர்களின் குடும்பத்தினருக்கு மனமார்ந்த அனுதாபத்தையும், ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தார் மன அமைதிக்காகவும், நலனுக்காகவும் நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.
வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களது குடும்பங்களுக்கு மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் தலா ரூ. 5 லட்சம் வழங்க உள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.