கோயம்புத்தூர்

உயிரிழந்த வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்: மாதா அமிர்தானந்தமயி மடம் அறிவிப்பு

DIN

புல்வாமாவில்  பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 40  சிஆர்பிஎஃப் வீரர்களின்  குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என்று மாதா அமிர்தானந்தமயி மடம் அறிவித்துள்ளது.
 இது குறித்து மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி:
நாட்டைப் பாதுகாக்கின்ற வகையில் தங்கள் கடமையின்போது உயிரிழந்த இந்த வீரம் மிக்க ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு அளிப்பது நமது தர்மமும், பொறுப்புமாக இருக்கிறது. இவர்களின் குடும்பத்தினருக்கு மனமார்ந்த அனுதாபத்தையும், ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறோம். 
உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தார்  மன அமைதிக்காகவும், நலனுக்காகவும் நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.  
வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களது குடும்பங்களுக்கு மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் தலா ரூ. 5 லட்சம் வழங்க உள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT