கோயம்புத்தூர்

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞர் சாவு; மூவர் காயம்

DIN

பொள்ளாச்சி அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். மேலும் மூவர் காயமடைந்தனர். 
பொள்ளாச்சி அழகப்பா லே-அவுட்டை சேர்ந்தவர் ரவிக்குமார் (32). இவர் தனது இருசக்கர வாகனத்தில் ராஜா (28) என்பவருடன் பொள்ளாச்சி- வால்பாறை சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார். வழியில் ரங்கசமுத்திரம் அருகே சென்றுகொண்டிருந்தபோது இந்த இருசக்கர வாகனம் மீது எதிரே வந்து கொண்டிருந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது. இதனால் தூக்கிவீசப்பட்ட ரவிக்குமார் சம்பவ இடத்திலேய உயிரிழந்தார். ராஜா பலத்த 
காயமடைந்தார்.  மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த கர்ணன் (20), முத்துராஜ்(20) ஆகியோரும் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

400 தொகுதிகளில் வென்று மோடி மீண்டும் பிரதமராவாா் -நயினாா் நாகேந்திரன்

கோவையில் இன்று கனிமொழி பிரசாரம்

வன்கொடுமை வழக்கு: 8 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

அண்ணாமலையின் பிரமாணப் பத்திரம் அதிகாரிகள் உதவியுடன் மாற்றம்! -பரபரப்பு குற்றச்சாட்டு

நாகை மக்களவைத் தொகுதி: 10 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT