சேவல் சண்டை போட்டி: 15 பேர் கைது

கோவையில் சேவல் சண்டை நடத்திய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் சேவல் சண்டை நடத்திய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை, சிங்காநல்லூர் ரயில் பாதை அருகேயுள்ள காலி இடத்தில் சேவல் சண்டை போட்டி நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. 
இதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் அங்கிருந்த நீலிக்கோணாம்பாளையத்தைச் பிரபு, மோகன் உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்தனர். 
அவர்களிடம் இருந்து ரூ.1250 ரொக்கம், 5 சண்டைச் சேவல்களைப் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கரையான்பாளையத்தில் இருந்து காரமடை செல்லும் சாலையில் கெம்பநாயக்கன்பாளையத்தில் சேவல் சண்டை நடப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அன்னூர் போலீஸார் அங்கிருந்த கெம்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சக்திவேல், அங்கமுத்து, தங்கேவல் உள்ளிட்ட 9 பேரைக் கைது செய்தனர். 
அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 440 ரொக்கம்,  2 சண்டைச் சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக அன்னூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com