தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா மேட்டுப்பாளையம் நகர அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது.
நகரச் செயலாளர் ஏ.வான்மதி சேட் தலைமையில் காந்தி சிலை அருகே இருந்து எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி பேரணியாக பேருந்து நிலையம் வரை சென்று அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ. ஓ.கே.சின்னராஜ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஏ.நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியச் செயலாளர் பி.டி.கந்தசாமி, துணை செயலாளர் எம்.என்.பாலன், நகர பொருளாளர் ஐடிஎஸ்.அமானுல்லா, வழக்குரைஞர் செந்தில்குமார், வேணுகோபால், ராஜன், எல்.எஸ்.புரம் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் எம்.எல்.ஏ. ஓ.கே சின்னராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அன்னதானத்தை துவங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் ரங்கராஜ், காரமடை ஒன்றிய முன்னாள் தலைவர் மணிமேகலை மகேந்திரன், பெள்ளாதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் முருகையன், தேக்கம்பட்டி ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் தங்கராஜ், மேட்டுப்பாளையம் பேரவை செயலாளர் வெள்ளியங்கிரி உள்பட பலர்கலந்து கொண்டனர்.