கோயம்புத்தூர்
கிணத்துக்கடவில் எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக் கூட்டம்
கிணத்துக்கடவில் எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கிணத்துக்கடவில் எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதற்கு, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் முத்துகருப்பண்ணசாமி, கிணத்துக்கடவு பேரூராட்சி அதிமுக செயலாளர் மூர்த்தி, துணைச் செயலாளர் டி.எல்.சிங், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கண்ணம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிணத்துக்கடவு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எட்டிமடை சண்முகம் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், அதிமுக பேச்சாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி பொருளாளர் லட்சுமணன் நன்றி கூறினார்.