ஸ்ரீ விநாயகா வித்யாலயா பள்ளியில் ஓவியத் திருவிழா: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

மேட்டுப்பாளையம் அருகேயுள்ள ஸ்ரீ விநாயகா வித்யாலயா (சிபிஎஸ்இ ) பள்ளியில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள


மேட்டுப்பாளையம் அருகேயுள்ள ஸ்ரீ விநாயகா வித்யாலயா (சிபிஎஸ்இ ) பள்ளியில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள ஓவியத் திருவிழாவில் பங்கேற்குமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ விநாயகா வித்யாலயா (சிபிஎஸ்இ) பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளை மகிழ்விக்கும் வகையில் பல் திறன் திருவிழா கொண்டாட்டம் நடைபெறுகிறது. வரும் 26ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை ஸ்ரீ முருகன் சங்கீத பொம்மலாட்டக் குழுவினரால் பக்த பிரகலாதன் என்னும் தலைப்பில் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 2ஆவது நாளான 27ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை பல்திறன் திருவிழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இதில், காலை 9.30 மணி முதல்10.30 மணி வரை ஓவியத் திருவிழா நடைபெறுகிறது. 3 வயது முதல் 5 வயது வரை, 
6 வயது முதல் 8 வயது வரை, 9 வயது முதல்12 வயது வரை, 13 வயது முதல் 15 வயது வரை, 18 வயது முதல் 35 வயது வரை என 5 பிரிவுகளாக நடைபெறும்.
இதற்கான முன்பதிவு மையங்களான பெரியநாயக்கன்பாளையம் ஏ.ஆர்.ஷாப்பி டிபார்ட் மெண்ட்ல் (82000-24645, 98944-79468) காரமடை தேவன் ஸ்டுடியோ (94886-73514), வீரபாண்டி பாவா பேன்ஸி (99941-77044), மேட்டுப்பாளையம் ஸ்கீரின் பிரிண்ட் (9842243958) ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com