இந்து முன்னணி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து கோவையில் அந்த அமைப்பினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், இந்து முன்னணி நிர்வாகி முனியசாமியின் நினைவு மண்டப திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் கே.கே.பொன்னையா, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் பழனிவேலுசாமி ஆகியோர் மீது காவல் துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தைக் கண்டித்து காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிவானந்தா காலனியில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு, இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ் தலைமை வகித்தார். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் குணா சிறப்புரையாற்றினார்.
அப்போது, தங்கள் அமைப்பின் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறை அதிகாரி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.