காய்ச்சல்: பள்ளி மாணவி சாவு

மேட்டுப்பாளையத்தில் மர்மக் காய்ச்சல் பாதிப்பால் பள்ளி மாணவி உயிரிழந்தார். 

மேட்டுப்பாளையத்தில் மர்மக் காய்ச்சல் பாதிப்பால் பள்ளி மாணவி உயிரிழந்தார். 
மேட்டுப்பாளையம், மகாதேவபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகள் ருத்ரபிரியா (14). இவர், மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.  
இந்நிலையில் ருத்ரப்ரியா காய்ச்சல் காரணமாக வெள்ளிக்கிழமை நள்ளிரவில்  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது காய்ச்சல் அதிகரிக்க அவர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் சனிக்கிழமை உயிரிழந்தார். 
இதையடுத்து  ருத்ரபிரியாவின் உடல் ஞாயிற்றுக்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.  இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com