இரு சக்கர வாகனம் மோதி முதியவர் சாவு

சூலூர் அருகே இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.

சூலூர் அருகே இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.
சூலூர் அருகே சுப்பராம்பாளையத்தைச் சேர்ந்தவர் நஞ்சப்பன் மகன் தங்கவேல் (55). இவர் முதலிபாளையத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்துவந்தார். சுப்பராம்பாளையத்திலிருந்து தென்னம்பாளையம் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார். 
அப்போது தென்னம்பாளையம் அருகே சாலையின் வலது புறம் திரும்பியபோது எதிர் திசையில் வேகமாக வந்த இரு சக்கர வாகனம் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து சூலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com