ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை (நவம்பர் 15) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, ஈரோடு மாநகராட்சி ஆணையர் மு.சீனிஅஜ்மல்கான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை(நவம்பர் 15) நடைபெற உள்ளது. மாநகராட்சி மைய அலுவலக அரங்கில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் இம்முகாமில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த வரும் பொதுமக்கள் ஆன்லைனில் ரூ. 500 செலுத்தி மனையின் கிரையப் பத்திரம், மனைப்பிரிவு வரைபடங்கள், அடையாள அட்டை நகல்கள், அண்மையில் பெறப்பட்ட வில்லங்கச் சான்று ஆகிய ஆவணங்களுடன் கலந்துகொண்டு தங்கள் மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம்.