அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
பவானி மாவட்ட கல்வி அலுவலர் ரேணுகா தேவி தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் த.செல்வராஜ் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நல்லசாமி முன்னிலை வகித்தார். ஈரோடு மாவட்ட தமிழ் மன்றத் தலைவர் தனபாக்கியம் "சாதிப்பதும் சாதித்ததும் பெண்களே‘ எனும் தலைப்பில் மகளிர் முன்னேற்றம், தன்னம்பிக்கை குறித்துப் பேசினார்.
விழாவையொட்டி நடைபெற்ற நினைவுத் திறன், ஆங்கில சொல்லறிதல், தமிழ் சொல்லறிதல், விநாடி வினா, கணிதப் புதிர் போட்டி, கையெழுத்துப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், அந்தியூர் கால்நடை மருத்துவர் அர்ஜுனன், ஆசிரியை பாக்கியலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.