ஈரோடு

ஊதியம் வழங்காததைக் கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஈரோடு மாவட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு இதுநாள் வரையிலும் ஊதியம்  வழங்காததைக் கண்டித்தும், மேலும் பல்வேறு மாவட்டங்களில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களுக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்தும்,  திங்கள்கிழமை காலையில் இருந்து  காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் அலுவலக வளாகத்தில்  நடைபெற்ற காத்திருக்கும் போராட்டத்துக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் தம்பிக்கலையன், என்எப்டிஇ மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணி, ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சையத் இத்ரிஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடியு முன்னாள் மாநில நிர்வாகி ப.மாரிமுத்து போராட்டத்தைத் தொடக்கி  வைத்துப் பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக ஆட்சியில் செய்யாறு தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள்: முக்கூா் என். சுப்பிரமணியன்

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர சிறுவா், சிறுமிகள் விண்ணப்பிக்கலாம்

கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ஆரணி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

SCROLL FOR NEXT