ஈரோடு
நாய் கடித்ததால் பாதிப்பு: தொழிலாளி சாவு
அந்தியூர் அருகே நாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அந்தியூர் அருகே நாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அந்தியூர் அருகிலுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (48). இவர் கடந்த 10 ஆண்டுகளாக, மூலக்கடை நீரேற்று நிலையத்தில் குடிநீர்த் தொட்டி பராமரிப்பாளராகப் பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன்னர் இவரை ஒரு நாய் கடித்துள்ளது. அதற்கு உரிய முதலுதவி சிகிச்சை எதையும் இவர் செய்துகொள்ளவில்லை.
இந்நிலையில், இரு நாள்களுக்கு முன் மனித இயல்புகளுக்கு மாறாக, நாய் போல இவர் நடந்துள்ளார். இதைக் கண்ட உறவினர்கள், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்குச் சேர்த்தனர். வெறிநாய்க்கடி நோய்க்கு சிகிச்சை பெற கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெங்கடேஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, வெள்ளித்திருப்பூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.