ஈங்கூர்
ஈங்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இங்கிருந்து மின் விநியோகம் நடைபெறும் பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், அனுமன்பள்ளி, அவல்பூந்துறை, ஈங்கூர், பாலப்பாளையம், மு.பிடாரியூர், வடக்குப் பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை ஆர்.எஸ். ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (செப்டம்பர் 20) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.