பெருந்துறை பேரூராட்சிக்கு உள்பட்ட சின்னவேட்டுவபாளையம் முதல் பெரியவேட்டுவபாளையம் வரை செல்லும் சிப்காட் சாலையை ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் செப்பனிடும் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பூமிபூஜை செய்து, பணியைத் தொடக்கி வைத்தார்.
இதில், பெருந்துறை வட்டாட்சியர் வீரலட்சுமி, சிப்காட் திட்ட அலுவலர் சாய்லோகேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, ஒன்றியச் செயலாளர் விஜயன், ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் கந்தசாமி, வேளாண்மை கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவர் அருள்ஜோதி செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.