தனித்து நின்றாலும் அதிமுக வெற்றி பெறும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.
பவானி நகர, ஒன்றிய அதிமுக கிளைச் செயலர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பவானியில் நகரச் செயலர் என்.கிருஷ்ணராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றியச் செயலர் எஸ்.எம்.தங்கவேலு வரவேற்றார்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தல் மட்டுமல்ல சட்டப் பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தல் என எந்தத் தேர்தல் வந்தாலும், தனித்து நின்றாலும் அதிமுக வெற்றி பெறும் என்றார்.
இதில், திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் வி.சத்யபாமா, அம்மாபேட்டை ஒன்றியச் செயலர் வி.எஸ்.சரவணபவா, தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியக் குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட அண்ணா தொழில்சங்கச் செயலர் கே.ஆர்.ஜான், கூட்டுறவு சங்கத் தலைவர் பி.மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.