தமிழகம் முன்னேற மாற்றம் தேவை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் பேசினார்.
ஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டுள்ள அவர் 2ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை ஈரோடு மரப்பாலம் பகுதியில் பேசியதாவது:
மத்திய அரசு தமிழக மக்களைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இந்த ஆட்சியில் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக்கொள்ளும் இந்த ஆட்சியாளர்கள் அவர் எதிர்த்த நீட் தேர்வு, கெயில் திட்டங்களை ஏற்றுக்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவின் பிரதமரை தமிழக மக்கள்தான் முடிவு செய்வார்கள். மக்களவைத் தேர்தல் விரைவில் வர உள்ளது. சிலர் பண மூட்டைகளுடன் உங்களைத் தேடி வருவார்கள். தமிழகம் முன்னேற மாற்றம் தேவை. அதற்கு அமமுகவை ஆதரிக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தர மக்களவைத் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார்.