அரசுப் பள்ளிக்குத் தேவையான பொருள்களை வழங்கிய பெற்றோர்

பவானிசாகர் அரசுத் தொடக்கப் பள்ளியில் கல்வி சீர்வரிசைப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. 

பவானிசாகர் அரசுத் தொடக்கப் பள்ளியில் கல்வி சீர்வரிசைப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு நுகர்வோர் பாதுகாப்புக் குழு தலைவர் முத்து தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் தண்டபாணி வரவேற்றார்.
பெற்றோர்களிடருந்து கல்விச் சீர்வரிசைப் பொருள்களாக சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் பெறப்பட்டன.
பள்ளிக்கு இதுநாள் வரை சுமார் ரூ 2.50 லட்சம் மதிப்பிலான பணிகள் நடைபெற்றுள்ளன என்றும் 270 பேர் நிரந்தரப் புரவலர்களாக உள்ளனர் என்றும் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர். 
நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com