ஈரோடு

சென்னிமலை அருகே சாலை விபத்தில் நெசவுத் தொழிலாளி சாவு

DIN

சென்னிமலை அருகே, இருசக்கர வாகனத்தின் மீது ஆட்டோ மோதியது. இதில், தந்தை உயிரிழந்தார். மகள் காயமடைந்தார். 
சென்னிமலையை அடுத்த வெள்ளோடு, நடுபாளையத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (53). நெசவுத் தொழிலாளி. இவருடைய மகள் நித்யா (17). இவர் சென்னிமலையில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். 
உடல்நிலை சரியில்லாத மகள் நித்யாவை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மனோகரன் ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் சென்றார். பின்னர், மாலை, 6 மணிக்கு, இருசக்கர வாகனத்தில் இருவரும் சென்னிமலை திரும்பினர்.வெள்ளோடு அருகே, சென்னிமலையில் இருந்து வெள்ளோடு நோக்கி வந்த ஒரு ஆட்டோ அவர்கள் மீது மோதியது. இதில், இருவரும் படுகாயமடைந்தனர். இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மனோகரன் உயிரிழந்தார். ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நித்யா சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சென்னிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT