பெங்களூரு கல்லூரியுடன் கொங்கு கலை அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கொங்கு கலை, அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), பெங்களூரு புனித ஜோசப் கல்லூரிகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

கொங்கு கலை, அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), பெங்களூரு புனித ஜோசப் கல்லூரிகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
கொங்கு கலை, அறிவியல் கல்லூரித் தாளாளர் ஏ.கே.இளங்கோ, புனித ஜோசப் கல்லூரி முதல்வர் டேனியல் பெர்ணான்டஸ் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதன் மூலம், இக்கல்லூரிகளுக்கிடையே ஆசிரியர், கல்வி, சுயதொழில் பயிற்சி, ஆய்வுகள், திறன்சார் பயிற்சி, ஆய்வக வசதிகள் உள்ளிட்டவை பரிமாற்றம் செய்யப்படும். இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் கல்லூரிகளின் கல்வித் தரம், ஆசிரியர்களின் திறன் மேம்படும். 
இரண்டு கல்லூரிகளின் கருத்தரங்கம் மற்றும் ஆய்வரங்கம் ஒருங்கே நடைபெறும். இந்த ஒப்பந்தம் இப்பகுதி மாணவர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு உதவியாக இருக்கும் என கொங்கு கலை, அறிவியல் கல்லூரியின் தாளாளர் இளங்கோ தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com