வலிமையான கூட்டணி உருவாகியுள்ளதால், வரும் மக்களவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பவானியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் செவ்வாய்க்கிழமை பங்கேற்ற அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தைப் பொருத்தவரையில், எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும் எனும் நம்பிக்கை மக்களிடம் உள்ளது. அதிமுக தனியாகப் போட்டியிட்டாலும் வெற்றி பெறும் நிலை உள்ளது.
அதிமுக அரசின் செயல்பாடுகளைப் பார்த்து கூட்டணிக் கட்சிகள் தேடி வருகின்றன. தற்போது பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வரவால் மேலும் வலுப்பெற்றுள்ளதால் அதிமுக கூட்டணி அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றும் என்றார்.