18 வயது பூர்த்தியடைந்தவர்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாக்காளர் முகாமுக்கு நேரில் சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் ஆகியப் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட படிவங்களில் விண்ணப்பிக்கலாம்.