பெருந்துறை, கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தொழிற் பயிற்சி நிலைய விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, ஈரோடு, கொங்கு கலை அறிவியல் கல்லூரி தாளாளர் ஏ.கே.இளங்கோ தலைமை வகித்தார். கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் ஆர்.எம்.தேவராஜா முன்னிலை வகித்தார். ஈரோடு மாநகர மக்கள் மேம்பாட்டு சங்கத்தின் துணைத் தலைவர் என்.பாலசுப்பிரமணியம் தேசியக் கொடியையும், சர்வதேச தடகள வீரர் எல்.குமரவடிவேல் கல்லூரிக் கொடியையும் ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர்.
கல்லூரி முதல்வர் வே.வேதகிரிஈஸ்வரன் வரவேற்றார். உடற்கல்வி இயக்குநர் கே.எம்.பிரகாúஷ்ராஜ் ஆண்டறிக்கை சமர்பித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளாராக என்.பாலசுப்பிரமணியமும், கெளரவ அழைப்பாளர் எல்.குமரவடிவேலும் பங்கேற்று மாநில மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு, பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர்.
இதில், கொங்கு அறக்கட்டளைப் பொருளாளர் ஈ.ஆர்.கே.கிருஷ்ணன், அறக்கட்டளை உறுப்பினர் பி.சச்சிதானந்தம் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். கல்லூரி மூன்றாமாண்டு (ஐசி) மாணவன் எம்.சரண் நன்றி கூறினார்.