மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குலவிளக்கு, பழமங்கலம், எழுமாத்தூர், முகாசிஅனுமன்பள்ளி, அட்டவணை அனுமன்பள்ளி உள்ளிட் 14 ஊராட்சிகளைச் சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகளுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி, நிர்வாகிகளுக்குப் பரிசுத் தொகுப்புகளை வழங்கினார். இதில், மொடக்குறிச்சி அதிமுக ஒன்றியச் செயலாளர் ஆர்.பி.கதிர்வேல், ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவர் கணபதி, ஆவின் இயக்குநர் அசோக், கூட்டுறவு சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.