ஈரோடு

எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

DIN

ஈரோட்டில் பெட்ரோலிய துறை, இயற்கை எரிசக்தித் துறை ஆகியன சார்பில் எரிபொருள் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
ஈரோடு கருங்கல்பாளையம்  காவிரிக்கரையில்  மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மேலாளர் ஜெயபிரகாஷ் முன்னிலையில்  நடைபெற்ற சைக்கிள் பேரணியை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்தனபாண்டியன் கொடி அசைத்து  தொடக்கிவைத்தார்.  காவிரிசாலை,  ஆர்.கே.வி.சாலை, மரப்பாலம், கள்ளுக்கடைமேடு, பழைய ரயில் நிலையம் வழியாக சென்ற பேரணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  அலுவலகம் அருகில் நிறைவடைந்தது.
இதில்,  வாகனங்களில் அதிக பாரத்தை ஏற்றிச்செல்ல கூடாது, சிக்னல்களில் நீண்ட நேரம் காத்திருக்கும்போது வாகன என்ஜினை அணைத்து வைக்க வேண்டும் என்பன உள்பட எரிபொருள் சிக்கன 
விழிப்புணர்வு குறித்து  பொதுமக்களுக்கு துண்டறிக்கை  விநியோகம் செய்யப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஜனநாய கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

‘சூரியனை சமாளிப்பதுதான் எங்கள் வேலை’

பூட்டிய வீட்டில் மூதாட்டி சடலம் மீட்பு

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்

அருணாசல், நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT