ஈரோட்டில் கருணாநிதிக்கு முழு உருவச் சிலை அமைக்கும் பணி தீவிரம்

ஈரோடு மாநகராட்சி, 25 ஆவது வார்டு முனிசிபல் காலனி பகுதியில் திமுகவுக்கு சொந்தமான இடத்தில் கருணாநிதியின் முழு உருவச்

ஈரோடு மாநகராட்சி, 25 ஆவது வார்டு முனிசிபல் காலனி பகுதியில் திமுகவுக்கு சொந்தமான இடத்தில் கருணாநிதியின் முழு உருவச் சிலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இச்சிலை வைக்கும் பணியை திமுக பொருளாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் பார்வையிட்டனர். இந்நிலையில், பீடத்தில் கருணாநிதியின் முழு உருவச் சிலை வைக்கும் பணி திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது. 
இப்பணியைப் பார்வையிட்ட ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் முத்துசாமி கூறுகையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவச் சிலை, சென்னை அறிவாலயத்தில் அமைக்கப்பட்டது போன்று முனிசிபல் காலனியில் அமைக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இச்சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 30 ஆம் தேதி திறந்து வைக்கிறார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com