ஈரோடு

சோளத்தட்டுப்போர் தீப்பிடித்து எரிந்து சேதம்

DIN


சென்னிமலை அருகே சோள தட்டுப்போர் தீப்பிடித்து எரிந்து சேதமானது. 
சென்னிமலை, ஊத்துக்குளி சாலை, கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் பொன்னப்பன் (65), விவசாயி. இவரது தோட்டத்தில் மாடு, எருமைகளுக்குத் தேவையான தீவனத்துக்காக சோளத்தட்டுகளை அடுக்கி வைத்திருந்தார். இந்நிலையில் இந்த சோளத்தட்டில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை கரும்புகை வந்தது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, சோளத்தட்டுப்போர் தீயில் எரிந்து கொண்டிருந்தது. 
உடனே, தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், தீ மள மளவென பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. 
இதுகுறித்து, சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT