பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் 21 இல் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா

ஈரோடு மாவட்டம், கோபி வட்டம் பச்சைமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

ஈரோடு மாவட்டம், கோபி வட்டம் பச்சைமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.
 இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை யாகசாலை பூஜை, மாலை 5 மணிக்கு ஆட்டு கிடாய் வாகனத்தில் சுவாமி தேர்வீதி உலா வருதல், மாலை 6.30 மணிக்கு மகாதீபாரதனையும், இரவு 7 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் தங்க ரதத்தில் சுவாமி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
 பின்னர் புதன்கிழமை காலை யாகசாலைபூஜை, காலை 9 மணிக்கு அருள்மிகு சண்முகருக்கு சிகப்பு சாத்தி சாத்தப்படும். மாலை மகாதீபாரதனையும், இரவு 7 மணிக்கு தங்கரதத்தில் சுவாமி திருவீதி உலா.
 வியாழக்கிழமை காலை 6 மணிக்கு மகன்யாக அபிஷேகம், காலை 7.30 மணிக்கு திருப்படி பூஜை விழாவும், காலை 8 மணிக்கு சண்முகருக்கு பச்சை சாத்தி சாத்தப்படும். காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை காவடி, பால்குடம்,  அபிஷேகம் நடைபெறும். மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு அலகு குத்துதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் தங்க ரதத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு யாகபூஜை, காலை 11.30 மணிக்கு அபிஷேகம், மகாதீபாரதனை, மாலை 5 மணிக்கு பரிவேட்டை, பின்னர் குதிரை வாகனத்தில் சுவாமி தேர்வீதி, மாலை 6.30 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சமேத சண்முகப்பெருமாள் மலர்ப் பல்லக்கில் நகர் வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அ.சீனிவாசன், திருப்பணிக்குழுத் தலைவர் பி.கே.ஈஸ்வரன் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com