100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கோலப் போட்டி

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கோலப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.  

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கோலப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.  
இதில் பல்வேறு மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 12 குழுக்களாக இணைந்து வாக்களிப்பதன் அவசியம் குறித்து கோலங்களை போட்டிருந்தனர். 
ஈரோடு மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகவடிவு கோலங்களைப் பார்வையிட்டு சிறந்த கோலங்களுக்குப் பரிசுகளை வழங்கினர். மேலும் கோலமிட்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.  முன்னதாக 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. 
இந்நிகழ்ச்சியில், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் லோகேஸ்வரன், கெளரி, சிவகுமார் உள்ளிட்ட தேர்தல் பிரிவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com