திமுகக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம்

திருப்பூர் மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  வேட்பாளர் அறிமுகக் கூட்டம் பெருந்துறையில் புதன்கிழமை நடைபெற்றது. 

திருப்பூர் மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  வேட்பாளர் அறிமுகக் கூட்டம் பெருந்துறையில் புதன்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு, பெருந்துறை ஒன்றிய திமுக செயலாளர் கே.பி.சாமி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் கே.ஆர்.திருநாவுக்கரசு வரவேற்றார். 
இதில் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  வேட்பாளர் கே.சுப்பராயனை அறிமுகம் செய்து  ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துசாமி பேசினார்.
இதில், முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சி.பெரியசாமி, காங்கிரஸ் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், சென்னிமலை வட்டாரத் தலைவர் பி.சிவகுமார், பெருந்துறை வடக்கு ஒன்றியத் தலைவர் என்.ஆண்டமுத்துசாமி, தெற்கு ஒன்றிய தலைவர் பி.ராவூத்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெருந்துறை தாலுகா செயலாளர் கே.குப்புசாமி,  மாவட்ட குழு உறுப்பினர் கே.ரவி, கொமதேக மாவட்டத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணி, மாவட்டச் செயலாளர் கே.பி.சாமிநாதன், பெருந்துறை ஒன்றிய மதிமுக செயலாளர் வி.எம்.கந்தசாமி, சென்னிமலை ஒன்றிய செயலாளர் எம்.துரைசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மணல் முரளி, குணவளவன், விஜயபாலன், மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஏ.சித்திக், பாபு(எ)முகமது அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சி.எம்.துளசிமணி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com