பண்ணாரி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 84.32 லட்சம் வரப்பெற்றது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பண்ணாரி அம்மன் மாரியம்மன் கோயில்.
இக்கோயிலில் பக்தர்கள் நேர்த்திக் கடனாக ரொக்கம், தங்கம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துவர். இதற்கென கோயில் வளாகத்தில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
குண்டம் விழாவையொட்டி வைக்கப்பட்ட உண்டியல்கள் கோயில் அதிகாரிகள், அறங்காவலர்கள் முன்னிலையில் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.
இதில் 20 உண்டியல்களில் ரூ. 84 லட்சத்து 32 ஆயிரத்து 460 ரொக்கம், தங்கம் 416 கிராம், வெள்ளி 1,360 கிராம் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
குண்டம் விழாவையொட்டி கடந்த மார்ச் 4 ஆம் தேதி வைக்கப்பட்ட பின்னர் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது. உண்டியல் எண்ணும் பணியில் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.