காருக்கு வழிவிடாததால் தகராறு: கோத்தகிரியில் இருவர் கைது

கோத்தகிரி அருகே காருக்கு வழிவிடாததால் ஏற்பட்ட தகராறில் இருவரை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.


கோத்தகிரி அருகே காருக்கு வழிவிடாததால் ஏற்பட்ட தகராறில் இருவரை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கோத்தகிரி அருகிலுள்ள அஜ்ஜுர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (35) இவர் இதே ஊரைச் சேர்ந்த ஹால்துரை (55), மோகன் (36), ஜெகநாதன் (40), பாலகிருஷ்ணன் (38), ஜெயகுமார் (47) ஆகியோரை தனது காரில் கோத்தகிரியிலிருந்து அஜ்ஜுருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதே ஊரைச் சேர்ந்த தட்லிதுரை (34), சிவலிங்கம் (36) ஆகியோர் மற்றொரு காரில் அஜ்ஜுர் சென்று கொண்டிருந்தனர். தட்லி துரையின் காரை முந்த விடாமல் சேகர் காரை ஒட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் காயமடைந்த ஹால்துரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் பேரில் தட்லி துரையையும், சேகரின் மனைவி சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் மோகனையும் கோத்தகிரி காவல் துறையினர் கைது செய்தனர். மற்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com