குன்னூர், கோத்தகிரியில் பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்காகத் தீவிர சுகாதாரப் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரான டாக்டர் பொற்கொடி உத்தரவின்பேரில் வட்டார மேற்பார்வையாளர் மணிகண்டன், குன்னூர் நகராட்சி ஆணையர் சரஸ்வதி ஆகியோர் தலைமையில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்கள், குன்னூர், கோத்தகிரி பேருந்து நிலையத்தில் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர். அங்குள்ள இருக்கைகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தினர்.
பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர்கள் கண்ணன், குமாரசாமி, சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில் கோத்தகிரி பேரூராட்சி சுகாதாரப் பணியாளர்களும் தீவிர சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டனர்.