தேசிய குழந்தைகள் அறிவியல் போட்டியில் கூடலூர் மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.
26 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து கூடலூர் ஜி.டி.எம்.ஓ. பள்ளி மாணவர்கள் விஷ்ணு, ஆஷத் ஆகியோர் அடங்கிய குழு மாநிலத்தில் முதலிடம் பிடித்து ஓடிஸா மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள், அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர் ஹரிசுதன் ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.