கோத்தகிரி ஜே.சி.ஐ. இன்டர்நேஷனல் சங்கத்தின் 34வது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை மதுரா டிராவல்ஸ் நிர்வாக இயக்குநர் வி.கே.டி.பாலன், ஜேசிஐ மண்டலத் தலைவர் கவின்குமார், குன்னூர் டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி, மண்டல துணைத் தலைவர் குமரேசன், அரிமா சங்கத் தலைவர் நந்தகுமார், செயலாளர் கணேஷ், ரோட்டரி சங்கத் தலைவர் நஞ்சுண்ட போஜன், உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் பாவா சிக்கந்தர் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இந்த ஆண்டின் புதிய தலைராக சுபம் பிரபு, செயலாளராக சசீதரன், பொருளாளராக மனோகரன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். மேலும் பிரபாகரன், ராஜேஷ்குமார், சண்முகராஜ், ஸ்வேதா, மாலதி, ஆகியோரும் புதி நிர்வாகிகளாகப் பொறுப்பேற்றனர். முன்னதாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பள்ளிகளுக்கு நன்கொடை உதவி, உடல் உறுப்பு தானம், ரத்த வங்கி இலவச சேவை ஆகியவை குறித்து ஆண்டு விவாவில் அறிவிக்கப்பட்டது. கஜேந்திரன் நன்றி கூறினார்.