கூடலூர் நூலகத்தில் நூலக வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூடலூர் நூலகத்தில் நடைபெற்ற 51ஆவது தேசிய நூலக வார விழாவுக்கு வாசகர் வட்டத் தலைவர் லியோ ஆண்ட்ரூஸ் தலைமை வகித்தார்.ஆசிரியர் நல்லக்குமார், கவிஞர் சோ.கந்தசாமி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாணவர்களுக்கு இலக்கியப் போட்டி நடத்தப்பட்டு, இதில் சிறப்பிடம் பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக மொய்தீன் பாட்ஷா வரவேற்றார்.நூலகர் கிளமண்ட் நன்றி கூறினார்.