கூடலூர் ரெப்கோ வங்கியில் பொன் விழா கொண்டாட்டம்

ரெப்கோ வங்கியின் பொன் விழா ஆண்டு கொண்டாட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

ரெப்கோ வங்கியின் பொன் விழா ஆண்டு கொண்டாட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
 தாயகம் திரும்பியோர் நலனுக்காக செயல்படும் ரெப்கோ வங்கியின் பொன் விழா கூடலூர் வங்கிக் கிளை வளாகத்தில் நடை பெற்றது. விழாவுக்கு கிளை மேலாளர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். ரெப்கோ வங்கியின் டெலிகேட்ஸ் யூனியனின் தென்னிந்திய தலைவர் சு.ஆனந்தராஜா, மாவட்டப் பிரதிநிதி வேலுராஜேந்திரன், அறங்காவலர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  விழாவைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தாயகம் திரும்பியோரின் நலனுக்காக வங்கியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  பேரவைப் பிரதிநிதிகள் பரமசிவம், மோகன்தாஸ், ஞானப்பிரகாஷ், வங்கிப் பணியாளர்கள், வங்கியின் வாடிக்கையாளர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள்கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com