கோத்தகிரியில் போக்குவரத்து சீரமைப்புப் பணிக்காக இன்னர்வீல் சங்கம் சார்பில் இரும்பால் ஆன சாலைத் தடுப்புகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
கோத்தகிரியில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க உதவும் வகையில் இன்னர்வீல் சங்கம் சார்பில் இரும்பால் ஆன சாலைத் தடுப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் இன்னர்வீல் சங்க மாவட்ட சேர்மன் சிந்து, தலைவி சொரூபா, செயலாளர் ரீத்து உள்ளிட் நிர்வாகிகள் கலந்து கொண்டு இரும்பால் ஆன சாலைத் தடுப்புகளை கோத்தகிரி காவல் நிலைய ஆய்வாளர் பாலசுந்தரத்திடம் வழங்கினர். இந்த சாலைத் தடுப்புகள் ராம்சந்த், காமராஜர் சதுக்கம், பேருந்து நிலையம், டானிங்டன் பகுதிகளில் போக்குவரத்தைச் சீரமைப்பதற்காக சாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.