ரபேல் போர் விமான ஊழலைக் கண்டித்து உதகையில் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான ஆர்.கணேஷ் தலைமையில், சுதந்திர தின சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் ராதாகிருஷ்ணன், தாராபுரம் சட்டப் பேரவை உறுப்பினர் காளிமுத்து, கோவை புறநகர் மாவட்டத் தலைவர் வி.எம்.சி.மனோகரன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜே.பி.சுப்பிரமணியம், உதகை நகரத் தலைவர் பி.கே.ஜி.கெம்பையா, ஊடகப் பிரிவுச் செயலர் ராஜா, நிர்வாகிகள் அழகேசன், ரவிகுமார், அத்துப்பா, அனஸ், அஸ்பெக், சுல்பி ஆகியோர் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.