மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகிகள் கவனத்துக்கு...

நீலகிரி மாவட்டத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சனிக்கிழமைகளில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகள் குறித்து

நீலகிரி மாவட்டத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சனிக்கிழமைகளில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகள் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்த அறிக்கை விவரம்:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மெட்ரிகுலேஷன்  பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளியின் வேலை நேரத்துக்கு மிகாமல் பாட வகுப்புகளைத் திட்டமிடவும்,  கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களுக்கு பெற்றோரின் எழுத்துப்பூர்வமான விருப்பத்துடன் சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 
மேலும், இந்நடைமுறையை அமல்படுத்தாத பள்ளிகளின் மீது புகார் பெறப்பட்டால்  அப்பள்ளி நிர்வாகியின் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com